வனம் சுமந்த குளுமை
வானம் அளந்த திமிர்
பெருங்காற்றின் முழுச்சுதந்திரம்
தன் சேயணைத்த தாய்மை
ஒரு மழைக்காலத்தின் நீர்மணிகள்
புதியது கொண்டு
பழையது தள்ளும் தன் லாவகம்
ஒரு ஒய்வு நேர சுத்தப்படுத்தலின் மிச்சம்
திடீரென விடுபட்ட தனிமை
ஒரு மதிய நேர இளங்காற்று
சிறு கூட்டின் கதகதப்பு
மெல்லியல்பில் இரும்புறுதி
இவற்றில் எதைச் சொல்கிறது,
ஓர் ஒற்றை யிறகு?
வானம் அளந்த திமிர்
பெருங்காற்றின் முழுச்சுதந்திரம்
தன் சேயணைத்த தாய்மை
ஒரு மழைக்காலத்தின் நீர்மணிகள்
புதியது கொண்டு
பழையது தள்ளும் தன் லாவகம்
ஒரு ஒய்வு நேர சுத்தப்படுத்தலின் மிச்சம்
திடீரென விடுபட்ட தனிமை
ஒரு மதிய நேர இளங்காற்று
சிறு கூட்டின் கதகதப்பு
மெல்லியல்பில் இரும்புறுதி
இவற்றில் எதைச் சொல்கிறது,
ஓர் ஒற்றை யிறகு?
//யிறகு?//தலைப்பு?
ReplyDeleteஒற்றை + இறகு = ஒற்றையிறகு
ReplyDeleteதலைப்பு? your choice.